• Latest News

    December 02, 2014

    யாரை ஆதரிப்பதென முடிவெடுப்பது கடினமாக உள்ளது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

    யாரை ஆதரிப்பதென முடிவெடுப்பது கடினமாக உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான – ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் . வாழைச்சேனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்
    அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

    மேலும் அங்கு உரையாற்றிய அவர் ,இந்த கட்சியை இரண்டு தரப்பு அழைக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் என்ன முடிவெடுக்கின்றது என சிந்திக்கின்றோம். யாரை ஆதரிப்பது? எவ்வாறு எமது சமூகத்தை கௌரவமாக வாழவைக்கலாம்? எமது சமூதாயத்தின் பாதுகாப்பு, எமது சமூகத்தின் பொருளாதாரத்தின் பாதுகாப்பு எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் இதை வைத்து தான் சிந்திக்கின்றோம். இந்த வேளையில் எந்த முடிவை எடுப்பது என்பது ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்ற போது அதன் கஷ்டம் தெரியும்.  பல இரவுகள் நான் தூங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாரை ஆதரிப்பதென முடிவெடுப்பது கடினமாக உள்ளது: அமைச்சர் றிசாட் பதியுதீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top