• Latest News

    April 21, 2015

    ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இடையில் சந்திப்பு

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சில விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
    எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
    இருவரும் சந்திப்பதற்கு பொதுவான ஓர் இடமொன்று ஒழுங்கு செய்யப்படும்.
    இருவரும் சந்திப்பு நடத்துவதற்கு உசிதமான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் இடையில் சந்திப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top