• Latest News

    May 27, 2026

    தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தீர்மானங்களை எடுக்கும் தனியான 'தர்ம நீதிமன்றம்' ஜனாதிபதி தெரிவிப்பு


    மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அற நிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
     
    பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட ‘தர்ம நீதிமன்றம்’ ஒன்றை மீண்டும் நிறுவுவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மேலும்
    குறிப்பிட்டுள்ளார்.
     
    மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அரச வெசாக் விழா இடம்பெற்றது.
    இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தீர்மானங்களை எடுக்கும் தனியான 'தர்ம நீதிமன்றம்' ஜனாதிபதி தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top