• Latest News

    April 20, 2018

    தந்த யானை ஒன்று மர்மமான முறையில் இறந்துள்ளது

    கோப்புப் படம்
     யால தேசிய சரணாலயத்தில் வாழ்ந்து வந்த மிஸக்க என்றழைக்கப்படும் தந்தங்களுடனான காட்டு யானை இறந்துள்ளது.

    சூட்டு சம்பவமொன்றினால் இந்த யானை நேற்று இறந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த இரண்டு வாரங்களாக காயத்தினால் இந்த யானை மிக கவலைகிடமாக இருந்த நிலையிலேயே நேற்று இறந்துள்ளது.

    இந்த யானையின் இடது கால் மற்றும் இடது கண்ணுக்கு அருகில் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    மிஸக்க யானைக்கு 35 வயது என கூறப்படுகின்றது.

    யானையின் கண்ணுக்கு அருகில் ஏற்பட்டுள்ள காயமானது, சூட்டு சம்பவமொன்றினால் ஏற்பட்ட காயம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக யால சரணாலயத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தந்த யானை ஒன்று மர்மமான முறையில் இறந்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top