• Latest News

    May 21, 2018

    நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் 13ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காணப்படுகின்றது. இதனால் இன்று (21) பிற்பல் 1 மணி வரை 3ஆயிரத்து 438 குடும்பங்களைச் சேர்ந்த 13ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இதேவேளை, 4 பேர் மரணமடைந்துள்ளார்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு வீடு முழுமையாகவும்,  173 வீடுகள், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 285 குடும்பங்களைச் சேர்ந்த 1,024 பேர் 20 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    இதேவேளை, ஏதாவது அனர்த்தம் ஏற்படபோகிறதென கண்டறிந்தால், அவைதொடர்பில், 117க்கு உடனடியாக அறிவிக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
    இந்த சீரற்ற வானிலையால், காலி மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் போபே, போத்தல, அக்மீமன  பிரதேச செயலாளர் பிரிவுகளின், 1,960 குடும்பங்களைச் சேர்ந்த 7,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையம் குறிப்பிட்டுள்ளது.
    இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை, இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்துள்ளது.
    இதேவேளை, சீரற்ற வானிலையால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு, இராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்கின்றனர் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
    இந்நிலையில், தற்போது நிலவுகின்ற சீரற்ற வானிலை, எதிர்வரும் 24 மணிநேரத்துக்கு நீடிக்குமாயின், இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, குருநாகல், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய ஏழு மாவட்டங்களில், மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் தென்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எதிர்வு கூறியுள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் 13ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top