பியகம-கடுவளையை இணைக்கும், களனி கங்கையை ஊடறுத்து
நிர்மாணிக்கப்பட்டுள்ள, கடுவளை பாலம், ஆபத்தான நிலையில் உள்ளமையால், அந்த
பாலத்தின் ஊடாக போக்குவரத்து, முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று வீதி
அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த பாலத்தின் நிலைமையை சோதனைக்கு உட்படுத்துவதற்காக,
பொறியலாளர் குழுவொன்று, அவ்விடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று
அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.

0 comments:
Post a Comment