மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரி
ஒருவரின் உடற்பாகங்களை புதைத்துள்ளமையின் காரணமாக தற்போது அப்பகுதியில்
பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்லடி பாலத்தினை சுற்றி
பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார்,இராணுவத்தினர் போன்றோர்
குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
மட்டக்களப்பு - கொழும்பு,அம்பாறை,திருகோணமலை போன்ற பல பிரதேசங்களுக்கு
இடையிலான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அப்பகுதியில்
இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்வின் -











0 comments:
Post a Comment