கைத்தொழில்,
வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு
அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும்
கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு
செய்துள்ள வர்த்தகப் பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து
வைத்தார்.
சிறிய மற்றும்
நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக
நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில்
இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கொழும்பு வர்த்தக
சங்க தலைவர் டாக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.




0 comments:
Post a Comment