முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அல்ல அவரது தந்தையை
ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கினாலும் எவ்வாறு தோற்கடிப்பது என்பது தமக்கு
தெரியும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களை இரண்டாம் சுற்றிலும் தோற்கடிப்பது எப்படி என்பதனை நாம் காண்பிப்போம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தில் நடைபெற்ற சில மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
எமது கட்சியில் பிரச்சினை இல்லை, பிரச்சினைகளை நாம் உள்ளேயே தீர்த்து
கொள்வோம். வெற்றியீட்டும் வேட்பாளரை நாம் உங்களுக்கு வழங்குவோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்

0 comments:
Post a Comment