தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
சே.ஜெயானந்தமூர்த்தி சற்றுமுன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக
மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பாசிக்குடாவில்
உள்ள விடுதி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்
சே.ஜெயானந்தமூர்த்தி உட்பட இன்னும் சிலர் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து
கொண்டுள்ளனர்.
ஜெயானந்தமூர்த்தி 2004ஆம் ஆண்டு பாராளுமன்றத்
தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.
44,457 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
ஜெயானந்தமூர்த்தியும்,
அவரது குடும்பத்தினரும் துணை இராணுவக் குழுவினரால் அடிக்கடி
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், ஐக்கிய இராச்சியத்திற்கு புலம்
பெயர்ந்து மீண்டும் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து இன்று
பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment