கோத்தபாயவின் பிரச்சாரங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக்ச ஓரம் கட்டப்படுவதாக அவரது குடும்பத்தினர் அதிருப்தி
வெளியிட்டுள்ளனர்.
மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்ச, புதல்வர்களான
நாமல், யோசித மற்றும் ரோஹித ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெற்கு
ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார
நிகழ்வுகளில் மஹிந்தவிற்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என அவர்கள்
அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இது குறித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு
வரும் நபர்களிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் பதவி வகிப்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்
இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கோத்தபாயவின் நிகழ்வுகளில்
மஹிந்த பிரதமர் என்பது பற்றிய பேச்சுக்கள் எதுவும் வெளியாகவில்லை என
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் மேடைப்
பேச்சுக்களின் போது மஹிந்தவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலைமையை
அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilwin-
tamilwin-

0 comments:
Post a Comment