• Latest News

    November 16, 2019

    2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் நான்கு சிறப்பம்சங்கள்

    2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலானது நான்கு சிறப்பம்சங்கள் காரணமாக தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
    அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தல், பதவிலிருக்கும் ஜனாதிபதியோ பிரதமரோ போட்டியிடாத ஒரே ஜனாதிபதி தேர்தல், அதிகளவு நீளம் கொண்ட வாக்குச்சீட்டைக் கொண்ட ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி தேர்தலுக்கான நேரம் ஒரு மணித்தியாளமாக அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் சிறப்பம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
    இந்த விடயங்களை குறிப்பிட்டு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இலங்கையில் தேர்தல் களம் தற்பொழுது பரபரப்பாகி வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    இவ்வாறான நிலையில் சில தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்கள்,
    • இரத்தினபுரி - 84%
    • திருகோணமலை - 83%
    • குருநாகல் - 82%
    • கம்பஹா - 81%
    • ஹம்பாந்தோட்டை - 81%
    • நுவரெலியா - 80%
    • களுத்துறை - 80%
    • கேகாலை - 80%
    • பதுளை - 80%
    • அம்பாறை - 80%
    • மொனராகலை - 80%
    • கண்டி - 80%
    • காலி - 80%
    • மாத்தளை - 79%
    • பொலனறுவை -79%
    • மாத்தறை -79%
    • முல்லைத்தீவு - 76.2%
    • வவுனியா - 75.12%
    • மட்டக்களப்பு - 75%
    • புத்தளம் -75%
    • அநுராதபுரம் - 75%
    • கொழும்பு - 75%
    • கிளிநொச்சி - 73%
    • மன்னார் - 71.7%
    • யாழ்ப்பாணம் - 66.5%   

    • கபே அமைப்பு) வெளியிட்டுள்ள இறுதி அறிக்கை
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் நான்கு சிறப்பம்சங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top