• Latest News

    December 25, 2019

    நாட்டில் மீண்டும் இன்புளுவன்ஸா - பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்

    நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அவானம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
    நாடுபூராகவும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் விசேடமாக கர்ப்பிணிகள், இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
    எ​னவே மேற்குறிப்பிட்டவர்கள் காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் மீண்டும் இன்புளுவன்ஸா - பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top