அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத்
பதியுதீன் எம்.பி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு
இன்று சி .ஐடியினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின் பின்னர் அவர் சி.ஐ.டியினரால் விடுவிக்கப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு
தொடர்பு இருப்பதாக இனவாத சக்திகளும் சில கடும்போக்குவாத பெளத்த தேரர்களும்
தொடர்ந்தேர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதுடன் அவரை விசாரணைக்குட்படுத்தி
கைது செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் வலுவான போராட்டம் நடத்தி
வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment