• Latest News

    March 01, 2020

    சுதந்திரக் கட்சியின் 15 உறுப்பினர்கள் சஜித்துடன் இணைய விண்ணப்பம்

    எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் பண்டார அதுகோரள இத் தகவலை கூறியுள்ளார்.

    அத்துடன் இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கமைய சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் என 15 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுதந்திரக் கட்சியின் 15 உறுப்பினர்கள் சஜித்துடன் இணைய விண்ணப்பம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top