ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாகக் கலந்துரையாடல்கள் ஏற்கனெவே நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் அவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment