• Latest News

    September 10, 2020

    இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த தீர்மானம் ஒத்திவைப்பு

    றைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த இறுதி
    தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது.

    அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
    இந்த விடயத்தில் தொடர்புபட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இறுதிதீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மகிந்தராஜபக்ச நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் தனது கருத்தினை முன்வைத்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

    மாடுகளை இறைச்சிக்கா கொல்வதை தடை செய்யப்போவதாக பிரதமர் தெரிவித்திருந்தார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை எப்போது சமர்ப்பிப்பது என்பதை பிரதமர் தீர்மானிப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த தீர்மானம் ஒத்திவைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top