• Latest News

    March 22, 2021

    இலங்கை தொடர்பில் இன்றைய வாக்கெடுப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பிலேயே இந்த வாக்கெடுப்பு இன்றைய தினம் நடத்தப்படவிருந்தது.

    ஜெனீவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.

    எனினும் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளினால் இந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஜெனீவா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கையில் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் கிரமமாக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமை நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை தொடர்பில் இன்றைய வாக்கெடுப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top