இன்று உலகம் மாறிவிட்டது அதற்கேற்றால் போல் நாமும் மாறவேண்டும். ஒருகாலம் இருந்தது தலைவர்கள் கட்டளை பிறப்பிப்பவர்களாக இருந்தனர். இன்று தலைவர்கள் நல்லதொரு coach என உருவாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எந்த இடத்தில் யாரை நியமிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனர். முன்னர் தனி ஒருவர் தீர்மானங்களை மேற்கொண்டார். இன்று ஒரு குழு இருந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் முறைக்கு உலகம் மாறிவிட்டது.
அதனடிப்படையில் மக்களிடமிருந்தும் கருத்துக்களை எடுத்து சட்டங்களை இயற்றுவதற்கு அரசு இப்போதாவது எத்தனித்துள்ளமையினை இட்டு சந்தோசமடைகின்றோம்.
ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களையே பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்கின்றோம். இந்த முறை பிழையானதாகும். அரசாங்கம் தமது வசதிக்கேற்ப மாணவர்களை இணைத்துக் கொள்ளட்டும். ஆனால் தகுதி வாய்ந்த ஏனைய மாணவர்களும் பட்டப்படிப்பினை மேற்கொள்ள தரமான தனியார் பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்க வேண்டும்.
பல்கலைக் கழகங்கள் research, and inquiry, creative, moral leadership, and entrepreneur leadership போன்ற கல்வி முறைகளுக்கு மாற்றம் பெற்று ஒருமைப்பாட்டோடு புதிய கண்டு பிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும். அதனூடாக நாடு முன்னேற வேண்டும்.
இதற்கு ஆரம்ப கல்வி முறைகளில் மாற்றம் என்பது இன்றியமையாததாகும். ஆரம்ப கல்விமுறையில் genius hour, experiential hour, Bit-size learning, joyful learning and gamification இவ்வாறான மாற்றங்களை கொண்டு வரப்படவேண்டும்.
இதற்கு ஆரம்ப பாடசாலைகளுக்கு double degree பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். நாம் இன்னமும் home guard teacher களை வைத்துக் கொண்டு உற்பத்தித்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்க முடியாது.

.jpeg)


0 comments:
Post a Comment