• Latest News

    January 18, 2025

    மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

     கடந்த ஜனவரி 16 ஆம் திகதி மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 


    இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் குறித்த சந்தேகநபர்களின் வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.

    தகவல்களை அறிய தர, மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரியின் 0718591363 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 0232223224 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top