• Latest News

    August 26, 2013

    நவனீதம் பிள்ளை வரும் போது நாட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனாதிபதி மஹிந்த!

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று பெலாரஸிற்கு விஜயம் செய்துள்ளார்.
    இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்கஷென்கோ, அந்நாட்டு பிரதமர் கலாநிதி அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெலாரஸ் நாட்டு ஜனாதிபதி அலக்சாண்டர் லுகஷென்கோ  மற்றும் பிரதமர் மிகைல் மியாஸ்னி கோவிச் ஆகியோர் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.
    இதன்போது இரு நாட்டு உறவுகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
    மேலும் பெலாரஸ்ஸில் நடைபெறவுள்ள வர்த்தக மன்ற மாநாட்டில் பங்கேற்கவூள்ள ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
    மேலும் சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்தும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவனீதம் பிள்ளை வரும் போது நாட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனாதிபதி மஹிந்த! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top