• Latest News

    August 28, 2013

    இலங்கையை ஆக்கிரமிக்க இரண்டு ஏகாதிபத்திய சக்திகள் திட்டம் – தம்மரத்ன தேரர்

    induragare
    இன்னும் இரண்டு தசாப்தத்தில் இலங்கையை இரண்டு பெரும் வல்லரசுகள் ஆக்கிரமிப்புகள் நடக்கலாம்இ  அது மிகப் பயங்கரமான ஆக்கிரமிப்பாக இருக்க போகிறது. நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு இன்று தீர்வில்லை என களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் கூறியுள்ளார்.

    குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    எதிர்காலத்தில் சீன மொழியை அறியாமல் எதனையும் செய்ய முடியாத நிலைமை உருவாகும்.  நாட்டில் உள்ள நாம் சிங்களம்இ தமிழ்இ ஆங்கலம் ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டாலும் எதிர்காலத்தில் சீன மொழியை கற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

     மேலும், சீன பெருஞ்சுவர் இலங்கையை சுற்றி அமைக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக என்ற அளவுக்கு இன்று சீனாவின் ஆக்கிரமிப்பு காணப்படுவதாக பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

    யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், நுரைச்சோலை, அக்கரைபற்று, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் சீனர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். அத்துடன் நாட்டின் அனைத்து இடங்களிலும் சீனர்கள் உள்ளனர்.

     இன்னும் இரண்டு தசாப்தங்களில் இலங்கை முற்றாக மாறிவிடும். மக்கள் தொகை மாத்திரமல்ல  மொழியும் மாறிவிடும். அப்போது இப்போதுள்ள எந்தப் பிரச்சினைகளையும்விட வித்தியாசமான பல பிரச்சினைகள் காணப்படும்.

     எனவே, நாட்டிலுள்ள உள்ள பிரச்சினைகளுக்கு இன்று தீரர்வில்லை என தம்மரத்ன தேரர் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையை ஆக்கிரமிக்க இரண்டு ஏகாதிபத்திய சக்திகள் திட்டம் – தம்மரத்ன தேரர் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top