• Latest News

    September 17, 2013

    அமெ­ரிக்க தூதுவர் சோபித தேரரை சந்­தித்­ததன் பின்­னணி என்ன?

    இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அண்­மையில் மாதுருவாவே சோபித தேர­ரரை கோட்டே­யி­லுள்ள தேரரின் விஹா­ரைக்கு சென்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திய ‘‘சம்­பவம்’’ அர­சாங்­கத்­திற்குள் சல­ச­லப்பை ஏற்படுத்தியுள்ளதோடு விவா­தத்­திற்­கு­ரிய விட­ய­மா­கவும் உருப்­பெற்­றுள்­ளது.
    ஏன்? எதற்­காக? இந்த சல­ச­லப்பு நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி பத­வியை இரண்டு தட­வைக்கு மேல் வகிக்­கலாம் என்ற 18 ஆவது திருத்­தத்­திற்கு அமெ­ரிக்கா தனது எதிர்ப்பை வெளிப்­ப­டை­யாக தெரி­வித்தது.
    இவ்­வா­றா­ன­தொரு நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­பட வேண்­டு­மென்ற சமூக அமைப்­பினை உரு­வாக்கி அதற்­கான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு மக்கள் ஆத­ரவை கோரும் சோபித தேரரை இலங்கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் சந்­தித்­துள்­ள­மையே அர­சுக்குள் சல­ச­லப்பை உரு­வாக்க கார­ண­மாகும்.
    இனி தெற்­கா­சி­யாவில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அமெ­ரிக்­காவின் மார்க்க வரை­படும் தொடர்­பாக ஆராய்வோம்.
    தெற்­கா­சி­யாவில் சர்­வா­தி­கா­ரத்­திற்கு வழியை ஏற்­ப­டுத்தும் அர­சி­ய­ல­மைப்­புக்­களை மாற்றி ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்தும் அமெ­ரிக்­காவின் திட்டம் பங்­க­ளா­தேஷில் ஆரம்­பித்து மாலை­தீவு வரை நீண்டு சென்­றது.
    இதன்­போது இந்­நா­டு­களை ‘விழுங்­கு­வ­தற்கு’ சீனா, பறக்கும் நாகங்­களைப் (‘‘டிராகன்’’) போல் காத்­தி­ருந்­தது.
    ஆனால், சீனா­வுக்கு அதற்­கான சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை.
    ஏனென்றால் அமெ­ரிக்­காவின் திட்­டத்­திற்கு தெற்­கா­சி­யாவின் வல்­ல­ர­சான இந்­தி­யாவின் ஆசீர்­வாதம் கிடைத்­த­மையே இதற்கு மூல கார­ண­மாக அமைந்­தது.
    2007 ஆம் ஆண்டில் பங்­க­ளா­தேஷில் ஜன­நா­ய­கத்­துக்­கான மக்கள் போராட்டம் ஆரம்­ப­மாகி மக்கள் வீதியில் இறங்­கினர்.
    இதனால், அந்­நாட்டில் மாபெரும் அர­சியல் நெருக்­கடி தோன்­றி­யது.
    இதனை தீர்ப்­ப­தற்­காக இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் இடைக்­கால நிர்­வாக ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.
    இவ் ஆட்­சியின் ஊடாக பங்­க­ளா­தேஷில் ஜன­நா­யக ஆட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சுதந்­தி­ர­மா­னதும் நீதி­யா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வ­தற்கு பின்­ன­ணியில் அமெ­ரிக்கா பெரும் பங்­காற்­றி­யது.
    அக்­கா­லத்தில் பங்­க­ளா­தேஷில் அமெ­ரிக்கத் தூது­வ­ராக பற்­றீ­சியா பூட்டநிங் பதவி வகித்தார். இவர் இலங்­கைக்­கான தூது­வ­ரா­கவும் பதவி வகித்­த­வ­ராவார்.
    அன்றைய அமெ­ரிக்கர் தூதுவர் பங்­க­ளா­தேஷின் தேர்தல் ஆணை­யா­ளரை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இது பங்­க­ளா­தேஷில் பெரும் சர்ச்­சையை சல­ச­லப்பை தோற்­று­வித்­தது.
    அது­மட்­டு­மல்­லாது பிர­தம நீதி­ய­ரசர், அரச, எதிர்க்­கட்சி தலை­வர்­களை சந்­தித்து பேச்­சுக்­களை நடத்­தி­ய­மையும் பங்­க­ளா­தேஷில் பெரும் சல­ச­லப்பை தோற்­று­வித்­தது. இதன் நோக்கம் பங்­க­ளா­தேஷில் ஜன­நா­ய­கத்தை தோற்­று­விப்­ப­தா­கவே அமைந்­தது.
    எப்­ப­டி­யா­யினும் இடைக்­கால அர­சாங்­கத்­தி­னூ­டாக  பங்­க­ளா­தேஷில் நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­தலை நடத்தி முடிப்­பதில் அமெ­ரிக்க தூதுவர் வெற்றி கண்டார்.
    அன்று புதிய வாக்­கா­ளர்­களை பதிவு செய்­வதன் மூலம் தேர்­தல்கள் ஆணை­யாளர் பெரும் பங்­க­ளிப்பை வழங்­கினார்.  அது மட்­டு­மல்­லாது அந்­நாட்டின் சிவில் அமைப்­புக்­களும் அமெ­ரிக்க தூது­வ­ருக்கு மிக்க பல­மாக இருந்­தன.
    பங்­க­ளா­தே­ஷிற்கு முன்­பதாக நேபா­ளத்தில்  தெற்­கா­சி­யாவில்  ஜன­நா­யகம்  கோலோச்சும் அர­சாங்­கத்தை உரு­வாக்கும் தனது பரீட்­சார்த்த நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்கா ஆரம்­பித்­தது.
    2006 ஆம் ஆண்டு மாவோ வாதி­களின் கிளர்ச்சி கார­ண­மாக நேபா­ளத்தின் அர­சாட்சி பெரும் நெருக்­க­டிக்கு உள்­ளா­ன­தோடு அர­சியல் ஸ்திர­மற்ற நிலை­மையும் உரு­வா­கி­யது. இந்த நெருக்­க­டியை தீர்த்து பங்­க­ளா­தேஷைப் போன்று நேபா­ளத்தில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்தும் விட­யத்தில் அமெ­ரிக்கா பெரும் பங்­காற்­றி­யது.
    அர­சரை வெளி­யேற்றி மக்கள் ஆட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான  அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க மாவோ வாதி­களின் (கிளர்ச்­சி­யா­ளர்கள்) உத­வி­யுடன் இடைக்­கால அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த அமெ­ரிக்­கா­வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் முடியு­மா­னது.
    ஆனால், அதற்கு பின்னர் ஆட்­சிக்கு வந்த பல அர­சாங்­கங்கள் வீழ்ச்சி கண்­டதால் நேபா­ளத்தில் அர­சியல் ஸ்திர­மற்ற நிலைமை தோன்­றி­யது.
    அமெ­ரிக்கா எதிர்­பார்த்த அந்­நாட்­டுக்கு உகந்த அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க ஆட்சியைக் கைப்­பி­டித்­த­வர்­க­ளா­லும் அரசியல் கட்­சி­க­ளாலும் முடி­யாமல் போனதே நேபா­ளத்தில் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை உரு­வாக கார­ண­மாக அமைந்­தது.
    தற்­போது மீண்டும் அமெ­ரிக்­கா­வி­னதும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் தலை­யீட்­டுடன் நேபா­ளத்தின் அனைத்து கட்­சி­க­ளையும் இணைத்துக் கொண்டு இடைக்­கால அர­சாங்கம் ஒன்றை அமைப்­பதில் அமெ­ரிக்­காவும் சர்­வ­தே­சமும் வெற்றி கண்­டுள்­ளன.
    அந்த இடைக்­கால அர­சாங்­கத்தின் தலை­வ­ராக நேபா­ளத்தின் பிர­தம நீதி­ய­ரசர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
    பிர­தம நீதி­ய­ரசர் மூலம் நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­தலை நடத்­தவும் ஜன­நா­யக ரீதி­யான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கவும் தயார் செய்து கொள்­வ­தற்­காக அமெ­ரிக்­காவும் சர்­வ­தே­சமும் தலை­யிட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றன.
    நேபா­ளத்தின் அர­சாட்­சியை இல்­லா­தொ­ழித்­த­மை­யா­னது அமெ­ரிக்­கா­வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் கிடைத்த வெற்­றி­யாகும் என்றே கூற வேண்டும்.
    மாலை­தீ­விலும் கடந்த வரு­டத்தில் அமெ­ரிக்­காவும் சர்­வ­தேசமும் இவ்­வா­றான தலை­யீட்­டையே மேற்­கொண்­டது. பல வரு­டங்­க­ளாக தொடர்ச்­சி­யாக மாலை­தீவை ஆட்சி செய்த அப்துல் கயூம் அந்­நாட்டின் ஜன­நா­ய­கத்தை ஆரம்­ப­கா­லத்­தி­லேயே சீர்­கு­லைத்­தி­ருந்தார்.
    இவ்­வா­றான நிலையில் 2008 ஆம் ஆண்டில் அமெ­ரிக்­காவும் சர்­வ­தேச சமூ­கமும் இணைந்து மாலை­தீவின் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் ஓர­ணியில் இணைத்து முன்­ன­ணி­யொன்றை அமைத்து ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்த முயற்­சியை மேற்­கொண்­டன.
    கையூம் தோல்வி கண்டு நஷீர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு மேற்­கொண்ட முயற்­சியே கார­ண­மாக அமைந்­தது. அதுவும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் கீழேயே அவர் ஆட்­சியை கைப்­பி­டிக்­கின்றார்.
    அமெ­ரிக்கா, சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் ஆட்­சிக்கு வந்த நஷீட், கையூமை போன்று மாலை­தீவின் எதிர்க்­கட்­சி­களை அடக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கு­கின்றார். இதனை அமெ­ரிக்­காவும் சர்­வ­தே­சமும் தடுத்து நிறுத்­து­கி­றது.  ஆனால், நஷீட் மாலைதீவின் பிர­தம நீதி­ய­ர­சரை கைது செய்யும் அள­வுக்கு பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மாக செயற்­ப­டு­கிறார்.
    இதனால் நஷீட்டை பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்றி உப ஜனா­தி­ப­தியை பத­வியில் அமர்த்தும் திட்டம் செயற்பட ஆரம்­பிக்­கப்­படு­கி­றது.
    இதன் பின்னர் உப ஜனா­தி­பதி மாலை­தீவின் ஜனா­தி­பதி ஆவ­தோடு நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­தலை நடத்­து­வ­தாக அமெ­ரிக்­கா­விற்கும் சர்­வ­தே­சத்­திற்கும் உறு­தி­ய­ளிக்­கின்றார்.
    இதன்­ப­டியே அண்­மையில் மாலை­தீவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட்­டது.
    தெற்­கா­சி­யாவில் சர்­வா­தி­கா­ரத்­திற்கு வழியைத் தயார் செய்யும் அர­சி­ய­ல­மைப்­புக்­களை இல்­லா­தொ­ழித்து ஜன­நா­ய­கத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான மார்க்க வரைபடம் பங்களாதேஷில் ஆரம்பித்து மாலைதீவு வரை இவ்வாறே வியாபித்தது ஆகும்.
    அமெரிக்காவின் திடடத்திற்கு தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவின் முழுமையான ஆசீர்வாதம் கிடைத்தமையால் திட்டங்கள் வெற்றி பெற்றது. இதன் காரணமாக பங்களாதேஷையும் மாலைதீவையும் விழுங்குவதற்காக பறக்கும் முதலைகள் போல் காத்திருந்த சீனாவுக்கு முடியாமல் போனது.
    தெற்காசியாவில் இவ்வாறான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த அமெரிக்கா, இலங்கையின் 18 ஆவது அரசியலமைப்பை எதிர்த்த அமெரிக்கா நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டுமென்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
    மாதுருவாவே சோபித தேரரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்தித்தார் என்றால் அது சோபித தேரரின் திட்டத்தை ஆதரிப்பதாகவும் அமைகிறது. இதனை சிறிய விடயமாக நினைக்க முடியாது.
    நன்றி: மெளபிம
    (தமிழில்: ப. பன்னீர்செல்வம்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெ­ரிக்க தூதுவர் சோபித தேரரை சந்­தித்­ததன் பின்­னணி என்ன? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top