• Latest News

    September 09, 2013

    ஒரு தொகுதி முன்னாள் விடுதலைப்புலிகள் இன்று விடுதலை

    பயிற்சி முடித்த முன்னாள் புலிகள் விடுதலைபுனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக் கொண்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 107 பேர் திங்களன்று வவுனியாவில் அரசாங் கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். விடுதலையாகி யுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள், பூஸா தடுப்பு முகாமில் இருந்து நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒரு வருட புனர்வாழ்வுப் பயிற்சிக்காகத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்தார். 
     விடுதலைப் புலிகளின் முழுநேர உறுப்பினர்களாக இருந்து, இராணு வத்தினருடன் சண்டைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு தொகுதியினரே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களில் இதுவரையில் 11 ஆயிரத்து 562 பேர் புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் 238 பேர் புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறுதி யுத்தத்ம் முடிவடைந்ததும், பொது மன்னிப்பளிக்கப்படும் என்று அரசாங்கம் தமக்களித்த உறுதிமொழியையடுத்து, இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைந்ததாகவும், அதன் பின்னர் தாங்கள் பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் விடுதலையாகியிருப்பவர்களில் சிலர் கூறினர்.
    இந்த வைபவத்தில் உரையாற்றிய மனித வள அமைச்சர் டி.யு குணசேகர ,

    'இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுமார் 12 ஆயிரம் பேரையும் நற்பிரஜைகளாக மாற்றி சமூகத்தில் இணைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட புனர்வாழ்வுப் பயிற்சித் திட்டமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைந்து வாழ்கின்றார்கள். இவர்கள் தொடர்பாக எவருமே இதுவரையில் எந்தவிதமான முறைப்பாடுகளையும் செய்ததில்லை. மனித உரிமை அமைப்புக்களும்சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகளும் சரி, ஐக்கிய நாடுகளோ அல்லது சர்வதேச நாடுகளோ இதுபற்றி எந்தவிதமான குறைகளையும் அல்லது, முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. இதன் மூலம் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான, இந்த புனர்வாழ்வுப் பயிற்சித் திட்டமானது பயனுள்ளது. முக்கியமானது என்பது நிரூபணமாகியுள்ளது' என தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு தொகுதி முன்னாள் விடுதலைப்புலிகள் இன்று விடுதலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top