• Latest News

    September 09, 2013

    ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ள வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தல்


    ஐநாவின் வாய்ப்பை பயன்படுத்தி செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்தி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை உரிய வகையில் செயற்பட வேண்டும். 
    இவ்வாறு  ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
    ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று (09) ஆரம்பமானது. இதன் போது இலங்கை குறித்து உரையாற்றிய அமெரிக்க பிரதிநிதி எய்லீன் சம்பர்லியன் டொனாஹோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது.

    மனித உரிமைகள், நீதி மற்றும் ஜனநாயக ஆட்சி குறித்து நவநீதம்பிள்ளையால் ஆராய முடியுமென அமெரிக்க பிரதிநிதி குறிப்பிட்டார்

    இதேவேளைஇ நவநீதம்பிள்ளையில் இலங்கை விஜயத்தை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள  பரிந்துரைகளை செயற்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

    நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் மீதான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ள வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top