• Latest News

    November 11, 2013

    மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் சீப்பலஸ் ஹாஜியார் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு  நன்கொடையாக வழங்கிய காணியை  விற்பனை செய்யப்பட்டதன் மூலம் பெறப்பட்ட 25 இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (10-11-2013) பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.ஏ.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
    இதில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்து கொண்டார். மேலும் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்களான எஸ்.ஏ.எஸ். இஸ்மாயில் மௌலானா, எஸ்.எம்.பீர்முகம்மது, ஏ.எல்.மீராமுகைதீன், பொருளாளர் எஸ்.எல்.எம்.நழீம் மற்றும்; மௌலவி ஏ. அபூஉபைதா, கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சட்டத்தரணிகளான  அமீறுல் அன்சார் மௌலானா, எம்.எஸ்.எம் ஜெமீல் சத்திர சிகிச்சை நிபுணர் சித்தீக் ஜெமீல் ஆகியோருடன், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top