• Latest News

    December 22, 2013

    குழந்தைகளுக்கான பால்மாவினை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!

    முபித் ;
    தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் மா பக்கட் ஒன்றைக் கூட  முழுமையாக  பணங்கொடுத்து வாங்கமுடியாது நாளுக்கு நாள்  கரண்டிக் கணக்கில் வாங்கி ஊட்டவேண்டிய துயரமான நிலைமையை சந்தித்து வருகின்றனர்.
    இவ்வாறு, மூதூர் எம்என்யூ ஹோட்டலில் டாக்டர் கே.எம்.ஸாஹிர் தலைமையில்  இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒன்று கூடலின்போது  செயற்குழு உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல்றஹுமான்   தெரிவித்தார்.
    அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

    இன்று இலங்கையிலுள்ள ஒவ்வொருவர் மீதும் தலா பல இலட்சம் ரூபாய்கள் கடனாக சுமத்தப்பட்டுள்ளது. அன்றாட பாவனைப்  பொருட்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிகளினால் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்குள் வாழ்ந்து வருகின்றனர்.உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளபோதும்    பணம்படைத்தவர்கள் தமது செல்லப்பிராணிகளாக பல இலட்சம் கொடுத்து வாங்கி  வீடுகளில் வளர்த்துவரும் உயர்தர நாய்களுக்குரிய தீவனத்துக்குரிய  வரியை இல்லாமற் செய்துள்ளது. அதற்கு வரியை விதிப்பதனால் அப்பணம் படைத்தவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்ற போதும் வரிவிதிக்கப்படவில்லை.

    அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கனிசமான சம்பளவேற்றம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில்  சம்பளவேற்றத்தினால் எவ்வித நன்மையும் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

    ஆனால், அரசியல் வாதிகள் மக்களது எத்தகைய துயரத்தையும் கவனத்திற் கொள்ளாது ஆடம்பரமான சுகபோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமான ஒருவராக அரசியலுக்குள் நுழைந்தவர்கள்கூட பெரும் கம்பனிகளுக்கும் பங்களாக்களுக்கும் சொந்கக் காரர்களாக உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களிலிருந்து இது எவ்வாறு   சாத்தியப்படும்?

    எனவேதான் இலங்கை மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இத்தேவையை உணர்ந்தே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டுவருகின்றது.

    இவ்வொன்று கூடலில் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின்,  நீதிக்கும் சுதந்திரத்துக்குமான கட்சியின் தலைவர் நஜா முஹமத் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பிர்தௌஸ் நளிமி,  ஆகியோரும் உரையாற்றினர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குழந்தைகளுக்கான பால்மாவினை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top