• Latest News

    December 03, 2013

    கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி புதிய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக சபாநாயகர்!

    mainpic L copy
    கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரியில் 8 மாடிகளை கொண்ட உயர்தர வகுப்பறைக் கட்டிடத்திற்கான நிர்மாண பணிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

    இந்த நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதம அதியாக கலந்துக்கொண்டார். சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, ஜீவன் குமாரதுங்க, நன்கொடையாளர் பேராசிரியர் பஸ்லி நிசார் மற்றும் அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    இதன்போது அகில இலங்கை சோனகர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவையொட்டி ஐந்து ரூபாய் பெறுமதியான முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

    தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்ககட்டிட வடிவமைப்பு மாதிரியை சபாநாயகரிடம்   உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

    இந்த கட்டிடம் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிசாரின் நன்கொடை நிதியத்தின் கீழ்  நிர்மாணிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி புதிய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக சபாநாயகர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top