• Latest News

    December 10, 2013

    கல்முனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஹரீஸ் பார்வையிட்டார்

    எஸ்.அஷ்ரப்கான்;
    தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனைப் பிரதேசத்தில்  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திதுலன அபிவிருத்தி திட்டங்களை கல்முனைப் பிரதேச ஒருங்கினைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்

     கல்முனை கிரீன் பீல்ட் பிரதேசத்திலிருந்து சாய்ந்தமருது வொலிவேரியன் வரை மிக நீண்ட காலத்தேவையாக இருந்து வந்த கல்முனை மற்றும் சாய்ந்தமருதை இணைக்கும் பாலம் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பியின் வேண்டுகோளையடுத்து நீர்ப்பாசன அமைச்சினால் தற்போது 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுவருகின்றது. இதன் நிர்மான வேலைகளையும் அவர் பார்வையிட்டார்.
     அத்துடன் கல்முனைக்குடி கடற்கரைப் பிரதேசத்தில்  4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் பீச் பார்க் அபிவிருத்தியினால்  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாககல்முனைக்குடி மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றதுடன் பிரச்சினைக்கான  சுமுகமான தீர்வுகளும் எட்டப்பட்டன.


    பிரஸ்தாப அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஹரீஸ் பார்வையிட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top