• Latest News

    March 20, 2014

    கல்முனை மாநகரை இன ரீதியாக துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்- ஜனாதிபதி

    எம்.வை. அமீர் 
    கல்முனை மாநகரை இன ரீதியாக துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாககல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிட்யின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸடர் றியாஸ் தெரிவித்தார்.
    அண்மையில் கல்முனைப் பிராந்திய முஸ்லிம்கள்தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் பேரணி ஒன்றை நடத்தியமையையிட்டு தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், கல்முனை மாநகரை இன ரீதியாக துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி மூலம் உரையாடிய போது ஜனாதிபதி இதனைத்தெரிவித்ததாக றியாஸ் தெரிவித்தார். 


    கடந்த  (2014-03-14) வெள்ளிக்கிழமை ஜும்மாதொழுகையைத் தொடர்ந்துஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரரனைக்கு எதிராகவும் மாபெரும் எதிர்ப்பு பேரணி கல்முனை வாழ் முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டது. 

     கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் உட்பட 21பள்ளிவாசல்கள் 3 வர்த்தக அமைப்புக்கள் 22 சமூக அமைப்புக்கள் 18 விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
     இப்பேரணியில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிட்யின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸடர் றியாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமன ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் மற்றும் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகரை இன ரீதியாக துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்- ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top