எம்.வை.
அமீர்
கல்முனை
மாநகரை இன ரீதியாக துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக, கல்முனை
மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிட்யின் கல்முனைத் தொகுதி
அமைப்பாளருமான பெஸடர் றியாஸ் தெரிவித்தார்.
அண்மையில் கல்முனைப் பிராந்திய முஸ்லிம்கள், தேசப்பற்றை
வெளிப்படுத்தும் வகையில் பேரணி ஒன்றை நடத்தியமையையிட்டு தான் பெரும்
மகிழ்ச்சியடைவதாகவும், கல்முனை மாநகரை இன
ரீதியாக துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று, ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுடன் தொலைபேசி மூலம் உரையாடிய போது ஜனாதிபதி இதனைத்தெரிவித்ததாக றியாஸ்
தெரிவித்தார்.
கல்முனை
முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் உட்பட 21பள்ளிவாசல்கள் 3 வர்த் தக அமைப்புக்கள் 22 சமூக அமைப்புக்கள் 18 விளையாட்டுக் கழகங்கள்
மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஏற்பாடு
செய்திருந்தது.
இப்பேரணியில்
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சிட்யின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸடர் றியாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மக்கள்
பிரதிநிதிகளின் செயலாளருமன ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் மற்றும் பெருந்திரலான
மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment