• Latest News

    March 30, 2014

    மு.காவின் மீதுள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி

     எஸ்.அஷ்ரப்கான்;
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக என்றும் ஒலிக்கும் என்பதில் எம் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

    நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

    நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

    இத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகவும், கட்சித் தலைமையினை பலப்படுத்துவதற்காகவும் வாக்களித்த கம்பஹா, கொழும்பு, களுத்துறை மற்றும் ஏனைய மாவட்ட முஸ்லிம் சகோதரர்கள், இளைஞர்கள், பெரியார்கள், உலமாக்கள், பெண்கள், கட்சிப் போராளிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    மேலும் கட்சியின் தேர்தல் வெற்றிக்காக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் குறிப்பாக இளைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இத்தேர்தலில் எமது கட்சி பெரும் சவால்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் எமது ஆசனங்களை மீளவும் உறுப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் மீதுள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன: எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top