காணாமல் போன மலேசிய விமானம் அதை
செலுத்திய விமானி அல்லது விமானிகளால்தான் கடத்தப்பட்டது என்பது உறுதிபட
தெரிந்துவிட்டது. MH 370 விமானத்தின் தலைமை பைலட் Zaharie Ahmad Shah,
சிறையில் இருக்கும் மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர்
என்றும், அவருடைய விடுதலையை கோரிதான், விமானத்தை கடத்தியிருப்பார் என்றும்
ஊகிக்கப்படுகிறது. இதனால் மலேசிய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது விமானத்தின் பைலட்டுகள் செக்யூரிட்டி முன்பாக நின்று சோதனை
செய்த சிசிடிவி கேமரா படங்கள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் அவர்கள்
இருவரும் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை
பார்க்க முடிகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் FBI கூறியிருக்கும் தகவலின்படி, ‘விமானத்தின்
சிக்னல்கள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும், விமானம் தரையில்
தற்போது பத்திரமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளது. விமானத்தை
நிறுத்தியிருக்கும் மர்ம இடத்தை அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து
கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன

0 comments:
Post a Comment