• Latest News

    March 23, 2014

    மழை வேண்டி துஆப் பிராத்தனை

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    உலக நீர் தினத்தையிட்டும் நாட்டில் நிலவுகின்ற வறட்சியினையிட்டும் சம்மாந்துறை  ஜம்யியதுல் உலம சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழை வேண்டிய  விNஷட துஆப் பிராத்தனை நிகழ்வு நேற்று (22) சம்மாந்துறை ஜம்யியதுல் உலம சபையின் கட்டிடத்தில் ஜம்யியதுல் உலம சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
    இந்த வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் தலைவர் கலாநிதி ஐ.எம்.இப்றாஹீம், விவசாய திணைக்களத்தின் சிரேஷ;ட மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.எம்.ஜெமீல், பொரும்பாக உத்தியோகத்தர் வை.ஏ.கபூர், நீர்பாசனத்திணைக்களத்தின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் பஸீர், விவசாயப் போதனாசிரியர்களான ஏ.அப்துல் மஜீட், ஏ.எல்.எம்பரீட், நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்றூப் மதனி உட்பட உலமாக்கள், விவசாய அமைப்புக்களில் தலைவர்கள் விவசாயப் பொதுமக்கள் என கூடுதலானோர் கலந்து கொண்டனர்.
    இந்த விNஷட துஆப் பிராத்தனை வைபவத்தில் விNஷட உரையினை மௌலவி எம்.ஏ.ஏ.எம்.அலிஅஹமட் றசாதி அவர்கள் நிகழ்ததினார் விNஷட துஆப்பிராத்தனை நிகழ்வை அல் ஹாபிழ் மௌலவி ஹச்சுமுஹம்மட் அவர்கள் நடாத்தினார்கள்.
    விNஷடமாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, உலமா சபை என்பவற்றின் தீர்மானங்களுக்கு அமைவாக 23ம் திகதி இன்றைய சுபஹ் தொழுகையினை தொடர்ந்து சகல பள்ளிவாசல்களிலும் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் விNஷட துஆப் பிராத்தனைகளை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மழை வேண்டி துஆப் பிராத்தனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top