மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்றார். கட்சியின் துணைத் தலைவர் என்கிற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, வெற்றியும், தோல்வியும் அரசியலில் சகஜம் என்று குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது என்றும் அவர்
கூறினார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் முக்கியக் கொள்கைகளில் சமரசம் இல்லை என்-றும் கூறினார்.மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.May 16, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment