• Latest News

    July 19, 2014

    இலங்கையில் தேரர்களின் நடவடிக்கைகளை சர்வதேசம் அவதானித்து வருகின்றது

    தற்காலத்தில் இந்நாட்டு தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசம் உண்ணிப்பாக அவதானித்து வருவதான பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாது, தேரர்களில் கடமை பௌத்த தர்மத்தை பாதுகாப்பதே என அவர் குறிப்பிட்டார்.

    கண்டி கலகெதற பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
    இந்நாட்டு விகாரைகளில் வசிக்கும் தேரர்கள் பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக மிகவும் அவதானமாகவுள்ளதாக சரத் அமுனுகம கூறினார்.

    மாலைதீவு, மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் முன்னர் பௌத்த நாடாகவே காணப்பட்டன எனினும் தற்கால தேரர்களின் நடவடிக்கை காரணமாக அந்நாடுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் தேரர்களின் நடவடிக்கைகளை சர்வதேசம் அவதானித்து வருகின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top