• Latest News

    July 08, 2014

    இன,மதவாத கடும்போக்காளர்களின் கருத்துக்களுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டாம்!

    மக்கள் இனவாத மற்றும் மதவாத பொறியில் சிக்கிவிடக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இனவாத, மதவாத கடும்போக்காளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரே வழி இதுவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அரசாங்கம் பொருளாதாரத்தை சீர்குலைப்பதில் கூடுதல் அக்கரை காட்டி வருகிறது, காலணித்துவ நாடுகளின் ஆதிக்கத்திற்குள் நாடு சிக்கியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜே.வி.பி கிராமம் கிராமமாகச் சென்று தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன,மதவாத கடும்போக்காளர்களின் கருத்துக்களுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டாம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top