• Latest News

    July 08, 2014

    அன்று ரிக்‌ஷா ஓட்டுநர்.. இன்று ஜனாதிபதி மாளிகையில் விருந்தாளி

    அரியானா மாநிலத்தில் கை ரிக்‌ஷா இழுத்து வந்த நபருக்கு ஜனாதிபதி மாளிகைக்கு விருந்திராய் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அரியானா மாநிலத்தின் யமுனா நகரில் உள்ள தம்லா என்ற கிராமத்தில் தரம்வீர் கம்போஜ் (51) தனது 23 வயதில் தந்தையுடன் தகராறு ஆனாதல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    இதன்பின் டெல்லிக்கு வந்த வேலை தேடிய இவருக்கு எதிர்பார்த்ததை போல் எந்த வேலையும் கிடைக்காததால் வாடகைக்கு கை ரிக்‌ஷா இழுத்து பிழைப்பை நடத்தியுள்ளார்.

    ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ர பதி பவன் அருகில் அடிக்கடி சவாரி செல்லும் இவர் அங்கிருக்கும் மூலிகைகளை பார்த்து ஆச்சிரியம் அடைந்துள்ளார்.அந்த மூலிகைகளை பற்றி பிறரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதை மனதில் பதிய வைத்துகொண்டு அவர் திடீரென விபத்திற்குள்ளாகி ஊருக்கு சென்றுள்ளார்.

    அங்கு விவசாய தொழிலில் ஆர்வம் காட்டிய அவர், வேளாண்மை உற்பத்தியில் அதிக மகசூல் பெறும் நவீன வழிமுறைகளை கடைபிடித்ததுடன் விவசாய கருவிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் அடைந்துள்ளார்.

    இதன் விளைவாக, டேப் ரெக்கார்டர் மோட்டர் மூலம் இயங்கும் சிறிய ரக மருந்து தெளிப்பான் இயந்திரம், பயிர்களை அழித்து நாசப்படுத்தும் புழு, பூச்சிகளை கவர்ந்து இழுத்து கொல்லும் 'பொறி' ஆகியவற்றையும், வளர்ந்து நிற்கும் கரும்பு பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் நிலத்தை உழும் நவீன ரக கலப்பை இயந்திரம் ஆகியவற்றையும் தனது சொந்த யோசனையினாலும், விடாமுயற்சியினாலும் இவர் உருவாக்கினார்.

    மேலும் கடந்த 2008ம் ஆண்டில் ஒரு மணி நேரத்துக்குள் 200 கிலோ தக்காளியை பிழிந்து கூழ் தயாரிக்கும் இயந்திரத்தை இவர் தயாரித்தார்.

    இந்நிலையில் வருடந்தோறும் நமது நாட்டில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து அபூர்வமான புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 5 நபர்களூக்கு விடுக்கப்படும் அழைப்பு தற்போது இவருக்கும் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து கடந்த மாதம் முதல் இவர் தனது குடும் பத்துடன்ஜனாதிபதி மாளிகையில் கடின உழைப்பாளி என்ற கெளரவமிக்க விருந்தாளியாக தங்கியுள்ளார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அன்று ரிக்‌ஷா ஓட்டுநர்.. இன்று ஜனாதிபதி மாளிகையில் விருந்தாளி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top