• Latest News

    July 18, 2014

    இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமையத்தின் இப்தார் நிகழ்வு

    எஸ்.அஷ்ரப்கான்: இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமையத்தின் (நொய்ஸ்) இப்தார் நிகழ்வு இன்று 18.07.2014 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு அமைப்பின் தலைவர் ஆசிரியர் எஸ்.முபாறக் தலைமையில் சாய்ந்தமருது தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபர் எம்.எச். நாஸர் கலந்து கொண்டார். அத்துடன் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.அஸ்வர்கான், எஸ்.எம்.பிறவ்ஸ், சம்சுல் முனா உட்பட  சாய்ந்தமருது பிரதேச செயலக சமூகசேவைப்பிரிவு அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர் அமைப்பின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இங்கு 'றமழான் குர்ஆனிய மாதம்' எனும் விசேட தலைப்பில் மௌலவி எஸ்.எல்.எம். நிக்ராஸ் விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றினார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமையத்தின் இப்தார் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top