எம்.வை.அமீர்: லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் அமைப்பும் இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய முற்போக்கு மன்றமும் இணைந்து இன்று (2014-07-18) சாய்ந்தமருது மல்ஹருல் சம்ஸ் மகா வித்தியாலயத்தில், அல்ஹாஜ் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களது தலைமையில், தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்று கூடலும் கௌரவிப்பும், இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
லக்ஸ்டோ தலைவர் மருதூர் ஏ.எல்.அன்சார் துP அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக யூ.எல். ஆதம்பாவா, தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா, உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி எம். தாசிம் போன்றோர் பங்குகொண்டு கருத்துரைகளை வழங்கிய அதேவேளை தென்கிழக்கு பிராந்தியத்தில் இருந்து பெரும்திரளான கலை இலக்கிய வாதிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தென்கிழக்கு பிராந்தியத்தில் இலக்கியத் துறையின் வளர்ச்சி பற்றியும் இப் பிராந்தியத்தில் இலக்கியத்துறைக்காக சேவையாற்றும் மூத்த படைப்பாளிகள் கௌரவிப்பு சம்பந்தமாகவும் இளம் எழுத்தாளர்களின் விபரங்கள் தொகுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் போது இலக்கியவாதி யூ.எல்.ஆதம்பாவா மற்றும் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், லக்ஸ்டோ தலைவர் மருதூர் ஏ.எல்.அன்சார் துP, உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி எம். தாசிம், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா போன்றோர் பொன்னாடைகளும் நினைவுப் பரிசுகளும் வாளங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியாக இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
0
0 comments:
Post a Comment