அலுத்கம மற்றும் பேருவளை உள்ளிட்ட
இடங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக போலீஸ் மா
அதிபர் என்.கே. இளங்கக்கோன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்
அவர் பதவி விலகாத காரணத்தினால் தாம் பதவியை
ராஜினாமா செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித
தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களுக்கான பொறுப்பினை
ஏற்று போலீஸ் மா அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அவர்
வலிறுயுத்தியிருந்தார். பதவியை ராஜினாமா செய்யத் தவறினால் தனது பாராளுமன்ற
உறுப்பினர் பதவியை துறப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
இதன்படி நாளைய தினம் பாராளுமன்றில் வைத்து
பாலித தெவரப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் பதவி
விலகல் கடிதத்தை ஒப்படைக்க உள்ளார். எனினும், இந்த ராஜினாமாவை ஏற்றுக்
கொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் இதுவரையில்
கருத்து எதனையும் வெளியிடவில்லை.-TC

0 comments:
Post a Comment