• Latest News

    September 16, 2014

    பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் நிவாரண நிதி கோரி மனு தாக்கல்

    மொனராகலை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், மொனராகலை மாவட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த நிவாரண நிதியை வழங்குவது ஏனைய மாவட்ட மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என மனுதார்கள் கூறியுள்ளனர்.

    மொனராகலை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2500 ரூபா நிவாரண நிதி வழங்குவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் எனக் கூறி தேர்தல் ஆணையாளர் அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். தேர்தல் ஆணையாளரின் தீர்மானம் அநீதியானது எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அரசியல் அழுத்தங்கள் இன்றி அந்த நிவாரண நிதியை வழங்குமாறு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த நிவாரண நிதியை வழங்குமாறு கோரி இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் நிவாரண நிதி கோரி மனு தாக்கல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top