• Latest News

    December 27, 2013

    குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 797 பேர் கைது !

    குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
    பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 797 பேர் இன்று (27) காலை வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று (26) காலை 6 மணி தொடக்கம் இன்று (27) காலை 6 மணி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 280 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் போது குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குடிபோதையில் பஸ் செலுத்திய இருவர், மோட்டார் சைக்கிள் செலுத்திய 430 பேர், முச்சக்கர வண்டி செலுத்திய 270 பேர், வேறு வாகனங்கள் செலுத்திய 95 பேர் என மொத்தம் 797 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 797 பேர் கைது ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top