அளுத்கம
பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான்
உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்
சம்பவத்தில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் அந்த பிரதேச மஸ்ஜித் ஒன்றை தாக்குதலில் இருந்து பாதுகாக்க
முற்பட்டபோது இவர்கள் மீது துபாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை
செய்யப்பட்டனர் .
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக
கைது செய்யுமாறு நீதவான் ஆயிஷா ஆப்தீன் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார்.
அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் சஹ்ரான் மற்றும் மொஹமட் ஷிராஸ்
ஆகியோர் மஸ்ஜிதை பாதுகாக்கும் முயற்சியில் சஹீதாக்கப்பட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது .இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்ற
விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment