'கத்தி' திரைப்படம் தொடர்பாக எங்களை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
எங்களது முடிவில் மாற்றமில்லை என்கிறது தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு 'கத்தி' படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. நாளை காலை முதல்
திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டும் என்று படக்குழு
நேற்றிரவு (அக்.20) அறிவித்தது. ஆனால், நேற்றிரவே 'கத்தி' திரைப்படம்
வெளியாக இருந்த சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை மர்ம
நபர்களால் தாக்கப்பட்டுள்ளன.
படக்குழு நேற்றிரவு பிரச்சினை சுமூகமாக முடிவுற்றது என்று
அறிவித்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு இது குறித்த எந்த ஒரு தகவலும்
வரவில்லை. தாக்குதல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமில்லை."
என்றார்.
மேலும் 'கத்தி' வெளியாவதாக இருந்த அனைத்து திரையரங்குகளுக்கும் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'கத்தி' திரைப்படம் சுமூகமாக வெளிவர ஆதரவு தந்த தமிழக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக, நடிகர் விஜய்
குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment