• Latest News

    November 06, 2014

    மங்கள அரசாங்கத்தில் இணைவது உறுதியில்லை! மங்களவும் சரத்தும் சிங்கப்பூரில் சந்திப்பு

    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்க கட்சியில் இணையும் தி;ட்டம் இன்னும் உறுதியாகவில்லை.

    இந்தநிலையில் மங்கள சமரவீரவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சிங்கப்பூரில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.

    சரத் பொன்சேகாவின் வெளிநாட்டு பயணத்தடை நேற்று நீதிமன்றத்தினால் நீக்கப்பட்ட பின்னர் அவர் தமது குழு ஒன்றுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    அதேநேரம் மங்கள சமரவீரவும் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.

    ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அவர் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தநிலையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் மங்கள மற்றும் சரத் ஆகிய இரண்டு தரப்புக்களும் பேச்சு நடத்தவுள்ளன
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மங்கள அரசாங்கத்தில் இணைவது உறுதியில்லை! மங்களவும் சரத்தும் சிங்கப்பூரில் சந்திப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top