அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு
வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏட்டிக்குப்
போட்டியான கூட்டங்கள் இன்று கொழும்பில் இடம்பெட்டிருள்ளன . நிறைவேற்று
ஜனாதிபதி முறைமையினை நீக்க கோரியும் இல்லையேல் பொது (படங்கள்)
வேட்பாளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என
எதிர்கட்சிகள் தலைமையில் ஒரு கூட்டமும், ஜனாதிபதியை ஆதரித்து தேசிய
அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் விமல் வீரவன்ச
தலைமையில் மற்றொரு கூட்டமும் இடம்பெற்றுள்ளன
கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி
மாதுலுவாவே சோபித தேரர் அரசாங்க பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல
உறுமயவின் இணைத்தலைவர் அதுரலிய ரத்ன தேரர் ஆகியோரின் தலைமையில்
ஏற்பாடு செய்திருக்கும் இவ் எதிர்ப்பு கூட்டத்தில் பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மக்கள்
விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட
பல எதிர்க்கட்சியினரும் பங்கேற்றுள்ளனர் , கூட்டம் நடைபெறும் மேடையில்
ரணில் , மங்கள சமரவீரா , சஜித் பிரேமதாசா, லால் காந்த , அர்ஜுன ரணதுக்கங்க
, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சோபித தரர் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் நஜா முஹமட் ஆகியோரும் அமர்துள்ளனர் .
இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின்
இணைத்தலைவர் அதுரலிய ரத்ன தேரர் ஜனாதிபதி மஹிந்த போட்டியிடட்டும் அவர்
தோல்வி அடைவார் மக்களின் ஜனநாயகம் வெல்லும் , ஒரு இரவில் 10 இலட்சம் மக்களை
திரட்ட எம்மால் முடியும். எனவே நீங்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்.
நாங்கள் உங்களை வீட்டுக்கு அனுப்புகின்றோம். நாங்கள் அதற்கு
தயாராகிவிட்டோம் என்றும் தெரிவித்தார் .
இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி
பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த் ஜாதிக ஹெல உறுமய இங்கொரு காலும்
அரசாங்கத்தில் ஒரு காலும் வைக்காமல் முதலில் உடனடியாக அரசாங்கத்தில்
இருந்து வெளியேறவேண்டும் நாளையே அதனை செய்யவேண்டும் என தெரிவித்தார் .
இக் கூட்டத்துக்கு சட்டத்தரணிகள்
சங்கம், சுதந்திர ஊடக மையம், ஜனநாயகத்திற்கான தேசிய இயக்கம், சமகி
இயக்கம் ஆகிய அமைப்புக்களும் கலந்து கொள்வதுடன், அரசாங்கத்தின்
பிரதான பங்காளிக்கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, இடதுசாரி மக்கள்
முன்னணி, சோசலிசக்கட்சி ஆகிய கட்சிகளும் இணைந்து கொண்டுள்ள என
அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு முத்தையா
மைதானத்தில் ஆரம்பித்த இக்கூட்டத்தில் பெரும்திகையானவர்கள் கலந்து
கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது
அதேபோல் பொது எதிரணியில் ஒன்றிணைந்து
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்ககுமாறு ஜனாதிபதிக்கு
தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தமது கோரிக்கையினை ஏற்று
அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு இணங்காவிடின் அடுத்த ஜனாதிபதி
தேர்தலில் அரசை வீழ்த்த பொது எதிரணியினை உருவாக்குவதாகவும்
எதிர்க்கட்சிகளின் பொது எதிரணியினர் தெரிவித்துள்ளனர் .
விமல் வீரவன்ச, மற்றும் பொதுபல சேனா அமைப்பின் ஆதரவு கூட்டம்
இதேவேளை ஜனாதிபதி முறைமையினை
நீக்குவது அடுத்தவொரு தீவிரவாதத்திற்கு வித்திடும் எனக்
குறிப்பிட்டு அரசாங்கத்தினை வலுப்படுத்த அடுத்த ஜனாதிபதி
தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
அமைச்சர் விமல் வீரவன்ச ,மற்றும் பொது பல சேனாவின் தலைமையில் இன்று
கொழும்பு சுகததாச உள்ளரங்கில் அரச ஆதரவு கூட்டமொன்று
இடம்பெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச
அரசாங்கமே வெற்றி பெற வேண்டி பல வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் எனவும் அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி
முறைமையினை நீக்காது ஜனாதிபதியை பலப்படுத்தவும் அமைச்சர் விமல்
வீரவன்ச, மற்றும் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் அதன் தலைவர் விமல
ஜோதி தேரர் , தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் , தேசப்பற்றுள்ள
தேசிய இயக்கத்தினர், உள்ளிட்ட பெருளவானோர் இந்தக் கூட்டததில் பங்கு
பற்றியுள்ளனர் .
மேலும் இக்கூட்டத்திற்கு ஜாதிக ஹெல
உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக் ரணவக்கவிற்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில்கலந்து கொள்ளவில்லை. அதேவேளை
அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இக் கூட்டத்தில் கலந்து கொள்வார்
எனஅறிவிக்கப்பட்டபோதும் அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.
படங்கள் அஸ்ரப் ஏ சமத்







0 comments:
Post a Comment