• Latest News

    November 22, 2014

    அரசாங்கத்திற்கு தலைச்சுற்றும் கிரக பெயர்ச்சி எதிர்காலத்தில்: மேர்வின் சில்வா ஆரூடம்

    நாட்டில் நடக்க போகும் கிரகபெயர்ச்சி குறித்து தான் கூறியது பலித்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

    சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் தொலைபேசியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    எப்படி இருக்கிறது மேர்வின் கூறிய கிரகபெயர்ச்சி. இலங்கையில் இருக்கும் சிறந்த ஜோதிடன் வேறு யாருமல்ல மேர்வின் சில்வாதான்.

    அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவிதி மேர்வின் கையிலேயே உள்ளது. நேற்று பெரிய கிரகம் ஒன்றும் சிறிய கிரகங்களின் பெயர்ச்சியும் இடம்பெற்றது.

    அரசாங்கத்திற்கு தலைச்சுற்று ஏற்படும் கிரகபெயர்ச்சி எதிர்காலத்தில் இடம்பெறும்.

    ஜனாதிபதிக்கு இந்த சகல கிரக பெயர்ச்சிகளையும் நிறுத்த முடியும். எனினும் அவரை சுற்றியுள்ள தவளைக் கிரகங்கள் அதற்கு இடமளிப்பதில்லை.

    இந்த தவளைக் கிரகங்கள் இணைந்து ஒரு நாள் அவருக்கு முடிவு கட்டிவிடும்.

    எனது மகனை வேண்டுமென்றே சிறையில் தடுத்து வைத்துள்ளனர். அவர் திருமணம் செய்து இரண்டு வாரங்கள்தான். அடி வாங்கியது எனது மகன்.

    எனது மகனை சிறையில் அடைத்து இவர்கள் தேர்தலில் வெற்றி பெற பார்க்கின்றனர். எனது பொறுமைக்கும் எல்லையுண்டு. இப்படியே சென்றால் நானும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்.

    ஆனால் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்ல போவதில்லை. சிறையில் இருந்த அனுபவங்கள் எனக்கு பழக்கமானது. அடுத்த வருடம் எனது 72 வயது.

    ஒன்றை மனத்தில் வைத்து கொள்ளுங்கள். ஜே.ஆர்.72 வயதியேயே பதவிக்கு வந்தார் என மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு தலைச்சுற்றும் கிரக பெயர்ச்சி எதிர்காலத்தில்: மேர்வின் சில்வா ஆரூடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top