
தற்போதைய நிலையில் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, நவீன் திசாநாயக, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ் . குணவர்த்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஜகத் புஸ்பகுமார, டீ. பி ரத்நாயக்க போன்ற மேலும் சில முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அழைப்பு தற்போது ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான இடம் இன்னும் குறிக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அலுவலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
0 comments:
Post a Comment