• Latest News

    November 10, 2014

    பொது வேட்பாளராக போட்டியிடுவது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்: சரத் பொன்சேகா

    பொது வேட்பாளராக போட்டியிவது வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டம் என 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    2010 ஆம் ஆண்டு தான் எதிர்நோக்கிய அனுபவங்கள் நினைவுக்கு வரும் போது மயிர்கூச்செறியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கோட்டே சோலிஸ் ஹொட்டலில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பில் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.

    பொது வேட்பாளராக போட்டியிடும் நபர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபடும் தயார் நிலையில் வரவேண்டும்.

    தேர்தல் காலத்தில் அனைவரும் நம்முடன் இருப்பர். ஆனால் தோல்வியடைந்த பின் அனைவரும் நம்மை விட்டுச் சென்று விடுவர்.

    தனித்தே சிறை சோறு சாப்பிட வேண்டும். இவற்றை அறிந்து புரிந்து கொண்டு பொது வேட்பாளர் போட்டியிடுவாரேயானால் சிறந்து எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது வேட்பாளராக போட்டியிடுவது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்: சரத் பொன்சேகா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top