• Latest News

    November 16, 2014

    நாட்டைச்சூழவுள்ள கடலோரங்களில் மழைக்கான சாத்தியம்?

    நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (16) இடி காற்றுடன் கூடிய மழை காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கரையோரமாகவும் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு கரையோரமாக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் மன்னாரிலிருந்து புத்தளம் வழியாக நீர்கொழும்பு வரையான கடலோரங்களில் மழை பெய்வதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

    இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டைச்சூழவுள்ள கடலோரங்களில் மழைக்கான சாத்தியம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top